முகப்பு
காஞ்சிபுரம்

கல்வியியல் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூர் சுபம் கல்வியியல் கல்லூரியின் சார்பாக, ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 2:52 AM
பகிர்:

மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூர் சுபம் கல்வியியல் கல்லூரியின் சார்பாக, ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வில்வராயநல்லூர் சுபம் கல்விக் குழுமங்களில் ஒன்றான சுபம் கல்வியியல் கல்லூரி சார்பாக தற்கால கல்வி நிலையில் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி டீன் என்.பத்ரி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜாஸ்மின் சுஜாதா வரவேற்றார். செயலர் எம்.பவன்குமார் கருத்தரங்க மலரையும், கல்லூரி பேராசிரியர்கள் எழுதிய 3 நூல்களையும் வெளியிட்டார். 
செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் கல்வியியல் கல்லூரி முன்னாள் முதல்வர் நான்சி நவநீதம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் புதூர் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா, வில்வராயநல்லூர் சமூக ஆர்வலர் வி.ராதிகா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். கல்லூரி உதவிப் பேராசிரியர் எஸ்.டி.வனிதா கருத்தரங்க அறிக்கையை வாசித்தார். கல்லூரி உதவிப் பேராசிரியர் பி.ஜானகிராமன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.