காஞ்சிபுரம்

ஆசிரியையிடம் 10 பவுன் செயின் பறிப்பு

DIN

காஞ்சிபுரத்தில் ஆசிரியையிடம் 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
காஞ்சிபுரம் வேலாயுதம் நகரில் வசித்து வருபவர் சிவசக்தி (50). இவர் அருகிலுள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்துவருகிறார். இவரும், இவரது மகளும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு மொபெட்டில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். 
இருவரும் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், சிவசக்தியிடம் அருகே திடீரென நெருங்கி வந்துள்ளனர். 
அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்திருந்த நபர், சிவசக்தி அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT