காஞ்சிபுரம்

தலையை துண்டித்து இளைஞரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது 

DIN

மறைமலை நகரை அடுத்த காட்டுப்பாக்கம் அருகே தலையைத் துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காட்டுப்பாக்கத்தை அடுத்த கோனாதிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (31) கடந்த திங்கள்கிழமை பட்டப்பகலில் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டார். 
இது தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கோனாதிகுப்பம் பகுதியில் இருந்து காவனூர் வழியாக காட்டுப்பாக்கம் செல்லும் வழியில் உள்ள சில வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் பின்பக்கம் அமர்ந்து வந்தவர் கையில் பாலிதீன் பையை மூட்டையாக எடுத்துச் சென்றது தெரிய வந்தது. 
அதனடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் இருவரும் காவனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. புதுச்சேரியில் பதுங்கியிருந்த அவர்களில் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு குற்றவாளியை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT