காஞ்சிபுரம்

இளைஞர் வெட்டிக் கொலை

DIN

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு நேதாஜி நகரைச் சேர்ந்தவர் நிவாஸ்கான் (28). இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். 
இந்நிலையில் திங்கள்கிழமை திருக்காலிமேடு எம்ஜிஆர் நகர்ப் பகுதியில் நிவாஸ்கான் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் இவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றது. 
இதில், பலத்த காயமடைந்த நிவாஸ்கான் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நிவாஸ்கான் இறந்தார். 
இதுகுறித்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT