முகப்பு
காஞ்சிபுரம்

கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

மதுராந்தகம் மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக, முதலாண்டு படிக்க சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கான வகுப்பு தொடக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை, 2018 at 4:05 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM


மதுராந்தகம் மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக, முதலாண்டு படிக்க சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கான வகுப்பு தொடக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் பல்வேறு இளநிலை படிப்புகளை படிக்க அண்மையில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளை வரவேற்று அவர்கள் சேர்ந்துள்ள வகுப்புகளின் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வி.சுபத்ரா தலைமை வகித்து, முதலாண்டு வகுப்புகளைத் தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் பி.திருமலை வரவேற்றார். 
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் டி.முருகானந்தம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாலோலன் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.