காஞ்சிபுரம்

வாகனம் மோதி முதியவர் சாவு

DIN

சோத்துப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இறந்தார்.
மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை புதன்கிழமை இரவு கடக்க முயன்றார். 
அப்போது, அச்சாலையில் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டுச் சென்று விட்டது. இதனால் பலத்த காயமடைந்த அந்த முதியவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். அவரது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT