காஞ்சிபுரம்

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது

DIN

கல்பாக்கம் அணைக்கட்டு அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கைது செய்தனர். 
கல்பாக்கம் அணைக்கட்டு காவல் சரகத்திற்குட்பட்ட சகாய நகர் கிளியாற்றுப் பாலம் அருகே  காவல் துணை ஆய்வாளர் அமுதா மற்றும் போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச் செல்வது தெரிய வந்தது. 
அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டர். அதில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர்கள் வீராண குன்னம் பகுதியைச் சேர்ந்த பழனி (43), ராஜு (36), தனசேகர் (40) எனத் தெரிய வந்தது. அந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மணல் கடத்தப் பயன்பட்ட 3 மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT