காஞ்சிபுரம்

அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சாரங்கன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சீத்தாராமன் கோரிக்கை குறித்த விளக்கவுரை ஆற்றினார். மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினார்.
இதில், நிகழாண்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மருத்துவக் காப்பீடு புதிய ஒப்பந்தத்தில் சில நிபந்தனைகளை நீக்கியும், சேர்த்தும் புதுப்பிக்கும் வகையில், ஓய்வூதியதாரர்களுக்கு, பணியில் உள்ளவர்களுக்கு வழங்குவது போல் அனைத்து மருத்துவமனைகளிலும் காப்பீடு வசதி செய்து தர வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணிபுரிந்த ஓய்வூதியதாரர்களுக்கும் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 
இதில், திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT