முகப்பு
காஞ்சிபுரம்

கிராமக் கணக்கில் வராதோருக்கு பட்டா: ஆட்சியர் வழங்கினார்

கிராமக் கணக்கில் வராதோருக்கு ஆட்சியர் பா.பொன்னையா பட்டா வழங்கினார்.

Updated On : 9 அக்டோபர் 2018, 4:16 am IST
பகிர்:


கிராமக் கணக்கில் வராதோருக்கு ஆட்சியர் பா.பொன்னையா பட்டா வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்து 20-க்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் வட்டம், வள்ளிபுரம் கிராமத்தில் வசித்து வருவோர் தங்களது அரசு பட்டா நிலம் கிராமக் கணக்குகளில் வரவில்லை என அண்மையில் மனு அளித்திருந்தனர். 
அதன்பேரில், வேங்கடம்மாள், முத்தழகி, ராஜேந்திரன், ஜானகி ஆகியோருக்கு ஆட்சியர் பட்டா வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, தனித்துறை ஆட்சியர் சக்திவேல் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.