ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் திருட்டு
புதுப்பட்டு கிராமத்தில் பூட்டிய வீட்டின் பின்புறக் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை மர்ம
புதுப்பட்டு கிராமத்தில் பூட்டிய வீட்டின் பின்புறக் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.
மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிலால். அவரது மகன் முகமது ராமீஸ் பாகர் (29), சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் புதுப்பட்டில் உள்ள தன் வீட்டுக்கு கடந்த திங்கள்கிழமை வந்தார். அப்போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 2 ஏசி இயந்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் திருடு போயிருந்தன.
இந்தத் திருட்டு தொடர்பாக ராமீஸ் பாகர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.