பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் 35ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் 35ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வா.ராமசாமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் வே.நாகராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சி கலைநிகழ்ச்சி பங்கேற்பாளர் பழனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரி தொடங்கி 35-ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இந்த கல்வி ஆண்டு முதல் அடிகளார் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. சுமார் 30 மாணவ மாணவிகளுக்கு முழு கல்விக் கட்டண விலக்கு 4 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. 25 மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வகையில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையாகும். கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கல்லூரி முதலாண்டு ஒருங்கிணைப்பாளர் ராதா நன்றி கூறினார்.