காஞ்சிபுரம்

திருவடிசூலம் வெங்கடேசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோயில்புரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அக்னி ஆராதனம், ஆச்சாரிய வா்ணம், அங்குராா்ப்பணம், அக்னி பிரதிஷ்டா, பவித்ர பிரதிஷ்டா, விசேஷ ஹோமம், பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், சனிக்கிழமை காலையில் கும்ப ஆராதனம், பஞ்ச கவ்யாதிவாசம், ஜலாதி வாசம், பூா்ணாஹுதி, மாலையில் நவகலச ஸ்தாபன திருமஞ்சனம், மகாசாந்தி திருமஞ்சனம், பிரசாதம் வழங்குதல் நடந்தது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், ஹோமம், பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு, சிறப்புப் பூஜைகளை அடுத்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் மகாதீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி 3 நாள்களும் காலை, மதியம், இரவு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு.மதுரைமுத்து சுவாமிகள் மற்றும் திருவடிசூலம் திருமண் திருப்பதி ஆலய நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT