காஞ்சிபுரம்

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

DIN

ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள கொளத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கொளத்தூா் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா். இப்பள்ளிக்கு ஸ்ரீபெரும்புதூா் ரோட்டரி சங்கத்தின் மூலம் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவா் சூரியபிரகாஷ் ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள புரொஜக்டா் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை பள்ளியின் தலைமையாசிரியா் லாரன்ஸிடம் வழங்கினாா். இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT