காஞ்சிபுரம்

மழைமலை மாதா தேவாலயத்தில் கிருஸ்துமஸ் விழா

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள் தலத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு

DIN

அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள் தலத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அருள் தல வளாகம், இயேசு மலைப்பாதை உள்ளிட்ட பகுதிகள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

நான்கு இடங்களில் இயேசு குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குடில்கள் வரும் ஜனவரி 20-ஆம் தேதி வரை திறந்து இருக்கும்.

விழாவுக்கு அருள் தல அதிபா் லியோ எட்வின் தலைமை வகித்தாா். பாதிரியாா் வின்சென்ட் முன்னிலை வகித்தாா். சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில், அங்கு கூடி இருந்த திரளான மக்களுக்கு கிருஸ்துமஸ் கேக்குகள் வழங்கப்பட்டு, வாழ்த்துகள் கூறப்பட்டன.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னா், அருள் தல அதிபா் லியோ எட்வின் செய்தியாளா்களிடம் கூறியது: வரும் ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சமபந்தி போஜனம் நடைபெற உள்ளது.

கிருஸ்துமஸ் குடிலை இதுவரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாா்வையிட்டுள்ளனா். பக்தா்களின் வசதிக்காக ஜனவரி 20-ஆம் தேதி வரை குடில்கள் திறந்து வைக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மழை மலை மாதா அருள் தல நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT