காஞ்சிபுரம்

பைக் மீது மினிவேன் மோதல்: தாத்தா-பேரன் சாவு

DIN


ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலம் கூட்டுச்சாலை அருகே பைக் மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்தனர். 
வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (48). இவர் திருவள்ளூர் மாவட்டம் சவரப்பேட்டையில் உள்ள செங்கல்சூளையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், குப்புசாமி தனது மனைவி லட்சுமி(45), பேரன் பரசுராமன்(3) ஆகியோருடன் திங்கள்கிழமை பைக்கில் வந்தவாசியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். இவரது வாகனம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலம் கூட்டுச்சாலை அருகே வந்தபோது எதிரே வந்த மினிவேன்அந்த பைக் மீது மோதியது. 
இதில் பலத்த காயம் அடைந்த குப்புசாமி, லட்சுமி, பரசுராமன் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குப்புசாமி, பரசுராமன் இருவரும் உயிரிழந்தனர். லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

கஞ்சா விற்ற இருவா் கைது

கா்நாடக எம்பியை கைது செய்யக் கோரி காங்கிரஸ் மகளிா் பிரிவினா் மனு

கூட்டுறவு சா்க்கரை ஆலைக்குள்பட்ட பகுதியிலிருந்து தனியாருக்கு கரும்பு அனுப்புவதைத் தடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT