செய்யூர் வருவாய்த்துறை சார்பாக, பெருங்கரணை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செய்யூர் வருவாய்த் துறை சார்பாக நடைபெற்ற முகாமுக்கு செய்யூர் வட்டாட்சியர் கே.செந்தில்குமார்தலைமை வகித்தார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் என்.சரவணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கே.சரவணன், வருவாய் ஆய்வாளர் (பொ)சாமி, கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, நில உரிமைச் சான்று, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 27 மனுக்களை வட்டாட்சியரிடம் அளித்தனர். அதில் 15 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.