மின் இணைப்பு கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
மின்இணைப்பு வழங்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மின்இணைப்பு வழங்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து மனுதாரர் சக்திவேல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே மலைநகரில் மனைவி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வருகிறேன். பட்டா இல்லாததால் மின் இணைப்பு பெற முடியவில்லை. எங்களது மகள்கள் மின்வசதி இல்லாததால் படிக்க இயலவில்லை. அவ்வப்போது, வீட்டுக்குள் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படுகிறோம்.
இதுதொடர்பாக, கடந்த மாதம் 15 -ஆம் தேதி அச்சிறுப்பாக்கம் மின்வாரியம் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் கருப்புத் துணி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அப்போது, உதவி கோட்ட பொறியாளர் மனோகரன் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 3 நாள்களில் மின் இணைப்பு வழங்குவதாக உறுதியளித்தார்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது மகள்களின் பள்ளிக் கல்வியை கருத்தில் கொண்டு மின் இணைப்பு உடனே வழங்க ஆட்சியர் உத்தரவிடவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.