காஞ்சிபுரம்

ஜூலை 13-இல் வாகன விபத்து இழப்பீட்டுக்கான மக்கள் நீதிமன்றம்

DIN


வாகன விபத்து  இழப்பீடு தொடர்பான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
மாநில  சட்டப்பணிகள் குழு சார்பில் வரும் 13ஆம் தேதி தேசிய மெகா லோக் அதாலத் நடத்தப்பட்டு பல்வேறு பிரிவுகளில் சமரசத்தீர்வு காணப்படவுள்ளது. அதன்படி, வாகன விபத்து இழப்பீடு வழக்கு சம்பந்தப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனபெறலாம். மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை பெற தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பணி மற்றும் ஓய்வூதியப் பலன்கள் குறித்து வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அனைத்து சார்பு தொழிலாளர் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெறவுள்ளது. 
மேலும், போக்குவரத்துக் கழகங்கள் தொடர்பான வழக்குகள் குறித்து விழுப்புரம் மண்டலம் (9445456009), வேலூர் மண்டலம் (9445456025), கடலூர் மண்டலம் (9445456021), காஞ்சிபுரம் மண்டலம்  (9445456036), திருவண்ணாமலை மண்டலம் (9445456042) ஆகிய போக்குவரத்து மண்டல செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT