காஞ்சிபுரம்

விபத்தில் பால் வியாபாரி பலி

DIN


கூடுவாஞ்சேரி அருகில் உள்ள நந்திவரம் பகுதியில் கழிவுநீர்க் கால்வாயில் இருசக்கர வாகனம் விழுந்ததில் பால் வியாபாரி இறந்தார்.
காயரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி கார்த்திகேயன் (40). அவர் செவ்வாய்க்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் நந்திவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். நந்திவரத்தில் உள்ள தனியார் நிறுவனம் அருகில் சென்றபோது அவரது வாகனம் நிலை தடுமாறி கழிவுநீர்க்ôல்வாயில் விழுந்தது. இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT