காஞ்சிபுரம்

ஜெனரேட்டர் வாகனம் மீது கார் மோதி பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி

DIN


மாமல்லபுரம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் வாகனம் மீது கார் மோதியதில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 
சென்னை புளியந்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மாறன் (21), கார் ஓட்டுநர். இவரது மனைவி சுவேதா (20). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. இவர்கள் உறவினர் இந்துமதி அவரது 10 மாதக் குழந்தை பரத் உள்ளிட்ட 7 பேருடன் புளியந்தோப்பில் இருந்து மாமல்லபுரத்தை அடுத்த வெண்புருஷத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு திங்கள்கிழமை மாலை காரில் சென்றனர். 
திருவிடந்தை கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸார் அங்கு சென்று பலத்த காயமடைந்தவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழ்மாறன், சுவேத உயிரிழந்தனர். தீவிர சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குழந்தை பரத் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT