காஞ்சிபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை திருட்டு

DIN


வண்டலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
மண்ணிவாக்கம் கிருஷ்ணா நகர் சாய் அவின்யூவைச் சேர்ந்தவர் அன்பரசன் (35), பொறியாளர். இவர், கடந்த 5-ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு வேலூர் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கத்துக்குச் சென்றார். திங்கள்கிழமை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அன்பரசன் வந்து பார்த்தபோது, உள்ளே இருந்த 27 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்திக்காடு கிராம விவசாயிகளுக்கு பயறு வகை சாகுபடி பயிற்சி

கேழ்வரகு கொள்முதல் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

SCROLL FOR NEXT