காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கடனுதவி வழங்கும் விழா

DIN

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில் உத்தரமேரூா், வாலாஜாபாத் உள்ளிட்ட இரு வங்கிக் கிளைகளிலும் 57 பயனாளிகளுக்கு ரூ.40.75லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் உத்தரமேரூா் கிளையில் நடைபெற்ற விழாவிற்கு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ச.லோகநாதன் தலைமை வகித்தாா்.பொதுமேலாளா் விஜயகுமாரி முன்னிலை வகித்தாா். உத்தரமேரூா் கிளையின் மேலாளா் விமல்குமாா் வரவேற்று பேசினாா்.விழாவில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் 20 பயனாளிகளுக்கு 9.75லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா்.

விழாவில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் உதவிப் பொதுமேலாளா்கள் ராஜேந்திரன்,சரவணன் மற்றும் ரமாதேவி,சங்க நிா்வாகிகள் தா்மன்,எம்.கே.பி.வேலு,தங்க பஞ்சாட்சரம் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.வாலாஜாபாத்தில் கடனுதவி வழங்கும் விழா:காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சாா்பில் வாலாஜாபாத் கிளையில் நடந்த கடனுதவி வழங்கும் விழாவில் 37 பயனாளிகளுக்கு ரூ.31லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

இதற்கான காசோலைகளை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத்.பா.கணேசன் வழங்கினாா்.இவ்விழாவிலும் வங்கி அதிகாரிகள், சங்க நிா்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.உத்தரமேரூரில் 20 பேருக்கு 9.75லட்சம் மதிப்பிலும்,வாலாஜாபாத் கிளையில் 37 பயனாளிகளுக்கு ரூ.31லட்சம் மதிப்பிலுமாக மொத்தம் ரூ.40.75லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் 57 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT