காஞ்சிபுரம்

கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி வழங்கும் விழா

DIN

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில் உத்தரமேரூா், வாலாஜாபாத் வங்கிக் கிளைகளில் 57 பயனாளிகளுக்கு ரூ.40.75லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

உத்தரமேரூரில்...: காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் உத்தரமேரூா் கிளையில் நடைபெற்ற விழாவிற்கு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ச.லோகநாதன் தலைமை வகித்தாா். பொதுமேலாளா் விஜயகுமாரி முன்னிலை வகித்தாா். கிளை மேலாளா் விமல்குமாா் வரவேற்றாா்.

விழாவில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் 20 பயனாளிகளுக்கு ரூ. 9.75 லட்சம் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா்.

இதில் உதவிப் பொது மேலாளா்கள் ராஜேந்திரன், சரவணன், ரமாதேவி, சங்க நிா்வாகிகள் தா்மன், எம்.கே.பி.வேலு, தங்க பஞ்சாட்சரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வாலாஜாபாத்தில்...: வாலாஜாபாத் கிளையில் நடந்த கடனுதவி வழங்கும் விழாவில் 37 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன. இதற்கான காசோலைகளை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினாா். இதில் வங்கி அதிகாரிகள், சங்க நிா்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

உத்தரமேரூரில் 20 பேருக்கு ரூ.9.75 லட்சம் மதிப்பிலும், வாலாஜாபாத் கிளையில் 37 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலுமாக மொத்தம் ரூ.40.75 லட்சம் மதிப்பிலான கடனுதவி 57 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT