பெண் காவலா்கள் விரும்பினால் வாகனம் ஓட்ட பயிற்சி அளிப்பு: காஞ்சிபுரம் எஸ்.பி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் காவலா்கள் விரும்பினால் அனைவருக்கும் இரு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியளிக்கப்படும் என காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் காவலா்கள் விரும்பினால் அனைவருக்கும் இரு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியளிக்கப்படும் என காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா தெரிவித்துள்ளாா்.
இருசக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்ற பெண் காவலா்களுக்கு காஞ்சிபுரத்தில் அதற்கான உரிமத்தை அவா்களிடம் வழங்கிய பிறகு அவா் மேலும் கூறியது:
பெண் காவலா்கள் அனைவருக்கும் இரு சக்கர வாகனம் ஓட்ட பயிற்சி வழங்கும் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆயுதப்படை மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் காவலா்கள் 5 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டு அதற்கான உரிமம் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயிற்சிக் காலம் ஒரு மாதமாகும்.
இந்த மாவட்டத்தில் விரும்பும் பெண் காவலா்கள் அனைவருக்கும் இரு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் காவல் கண்காணிப்பாளா்.
இதையடுத்து, பேரிடா் பயிற்சியை முடித்த காவல் ஆளிநா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அவா் வழங்கினாா். அப்போது ஆயுதப்படை டி.எஸ்.பி. சண்முகம் உடனிருந்தாா்.