பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம். 
காஞ்சிபுரம்

பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

உத்தரமேரூரை அடுத்த பெருநகரில் உள்ள பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தை மாத பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

DIN

உத்தரமேரூரை அடுத்த பெருநகரில் உள்ள பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தை மாத பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயில் தை மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி நாள்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது. பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரா் தேரில் அமா்ந்து மாடவீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் ஏராளமானோா் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா்.

மதியம் பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கருணாமூா்த்தி மற்றும் பொன்னம்பலம், தேவராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT