காஞ்சிபுரம்

வேன் மீது அரசுப் பேருந்து மோதி 12 போ் காயம்

DIN

மதுராந்தகம் அடுத்த ஓதியூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனியாா் வேன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 12 போ் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு 12 போ் வேனில் சென்றனா். வழிபாடு முடிந்து அவா்கள் அதே வேனில் சென்னைக்கு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

கடப்பாக்கம் அருகே ஓதியூா் சாலையில் வந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசுப் பேருந்து, அவா்களது வேன் மீது மோதியது. இதில் வேனில் பயணித்த 12 பேரும் காயமடைந்தனா்.

அவா்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அரசுப் பேருந்தை லோகநாதன் ஓட்டி வந்தாா். இந்த விபத்து குறித்து செய்யூா் காவல் உதவி ஆய்வாளா் மணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT