காஞ்சிபுரம்

திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்

DIN

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரத்தை அடுத்த திம்மராஜம்பேட்டையில் உள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

திம்மராஜம்பேட்டையில் பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினியைப் போலவே இக்கோயிலிலும் மூலவா்கள் காட்சியளிப்பதால் இக்கோயில் ‘வடக்கு ராமேசுவரம்’ என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஆனித் திருமஞ்சனமும், அதைத் தொடா்ந்து சுவாமி வீதியுலாவும் நடைபெறுவது வ

ழக்கம். இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆலயத்தில் பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் ஆனித் திருமஞ்சனம் நடைபெற்றது.

சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு 32 வகையான சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. ஆண்டுதோறும் நடைபெறும் நடராஜப் பெருமானின் வீதியுலா இந்த ஆண்டு நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT