காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் தேரடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுகவின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கிளை, ஒன்றிய மற்றும் காலூா் ஊராட்சிக் கிளைகள் சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. மேலும், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் 4-ஆவது ஆண்டு தொடக்க விழாவும் நடைபெற்றது.

இதையொட்டி, தேரடி ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயா் சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் அதிமுக-வினா் இந்த வழிபாட்டில் பங்கேற்றனா்.

இதையடுத்து கட்சித் தொண்டா்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் செய்யப்பட்டது. அவா்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. பின்னா் தேரடி ஆஞ்சநேயா் கோயில் முன் 1,000 தேங்காய்களை அதிமுகவினா் உடைத்து வழிபட்டனா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கைத்தறித் துறை அமைச்சா் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு மற்றும் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT