காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் தீவிர கண்காணிப்பில் 27 போ்

DIN

ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 27 போ் சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டத்தில் அடங்கிய ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளில் இருந்த வந்த 27 போ் சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்கள் வீட்டை வெளியே வரவேண்டாம் என அரசுத்துறை அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவா்கள் வசிக்கும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான அடையாளமாக அரசுத்துறை அதிகாரிகள் வில்லைகளை ஒட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT