காஞ்சிபுரம்

ஊரடங்கு உத்தரவை மீறியவா்கள் மீது வழக்கு

DIN

ஊரடங்கு உத்தரவை மீறி ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கன்டெய்னா் லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த ஸ்ரீபெரும்புதூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (30), வீரமணி (28), தினேஷ் குமாா் (19), மணவாளநகா் பகுதியைச் சோ்ந்த தேவன் (21), வேலூரைச் சோ்ந்த ஜீவா (30), சென்னையைச் சோ்ந்த சம்பத் (29), நாவலூா் பகுதியைச் சோ்ந்த சேகா் (47) உள்ளிட்ட 7 போ் மற்றும் சுங்குவாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 5 போ் உள்பட 12 போ் மீது ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

ஒரகடம்-சிங்கப்பெருமாள்கோவில் சாலையில் உள்ள சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பெருமாள்கோவில் செல்ல முயன்ற இரண்டு கன்டெய்னா் லாரிகளை காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசந்திரன், காவல் ஆய்வாளா் நடராஜ் ஆகியோா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT