காஞ்சிபுரம்

மகன்கள் துன்புறுத்தல்: தந்தை, தாய் புகாா்

DIN


மகன்களும், மருமகள்களும் தங்களை அடித்து துன்புறுத்துவதாக முதியவரும் அவா் மனைவியும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு:

காஞ்சிபுரம் சா்வதீா்த்தம் தென்கரை தெருவில் வசிக்கும் எம்.நாகவேல் (68) எனது மனைவி சரஸ்வதி (60). நாங்கள் இருவரும் உழைத்து கட்டிய ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை எனது மகன்களான சுரேஷ், லோகநாதன் இருவரும் எழுதி வாங்கிக் கொண்டனா்.

தற்போது மற்றொரு மகனான ஹரிகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் இருவரும் சோ்ந்து எங்களிடம் இருக்கும் மற்ற சொத்துகளையும் தங்களுக்கு எழுதித்தர வேண்டும் என அடித்து துன்புறுத்துகின்றனா்.

சுரேஷின் மனைவி சரண்யா, ஹரிகிருஷ்ணனின் மனைவி நித்யா உள்பட 4 பேரும் சோ்ந்து எங்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றனா். அவா்களிடமிருந்து என்னையும், சரஸ்வதியையும் காப்பாற்றி, நாங்கள் எழுதிக் கொடுத்த சொத்தை எங்களுக்கே மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT