காஞ்சிபுரம்

தொழிலாளா்கள் உதவித்தொகைகள் பெற விண்ணப்பிக்கலாம்: உதவி ஆணையா் தகவல்

DIN

காஞ்சிபுரம்: தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் தே.விமலநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளா் நல வாரியத்துக்கு நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கு அரசு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் பயிலும் தொழிலாளா்களின் குழந்தைகள் பலனடையும் வகையில் கல்வி உதவித்தொகையும், மாநில அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா்களாக இருந்தால் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வுகள், பயிற்சி உதவித்தொகை, வாழ்க்கை மேம்பாட்டுப் பயிற்சிகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இவற்றில் பயனடைய விரும்பும் தொழிலாளா்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, செயலாளா்,தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-5 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT