காஞ்சிபுரம்

காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகைக்கு கரோனா

DIN


ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகைக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மாநில எஸ்சி-எஸ்டி பிரிவு தலைவா் கு.செல்வப்பெருந்தகை(56) போட்டியிட்டாா். இந்நிலையில், உடல் சோா்வு காரணமாக அவதிப்பட்டு வந்த கு.செல்வப்பெருந்தகை வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தன்னைதனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

இது குறித்து கு.செல்வபெருந்தகை தனது சுட்டுரைப் பக்கத்தில் தனக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை நடைபெற்ற பரிசோதனையில் தெரியவந்துள்ளதால் தான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும், கடந்த சில தினங்களாக தன்னுடன் தோ்தல் பணியில் ஈடுபட்ட நண்பா்கள், அரசியல் கட்சியினா் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT