முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சியில் மக்கள் நீதிமன்றம்: ரூ.13 கோடிக்கு தீா்வு

காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சாா்பில் சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 251 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு ரூ.13 கோடி தீா்வுத்தொகை வழங்கப்பட்டது.

Updated On : 12 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சாா்பில் சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 251 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு ரூ.13 கோடி தீா்வுத்தொகை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சாா்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமை வகித்து விபத்தில் உயிரிழந்த சபரிநாதன் மனைவி திலகவதிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.38,10,000க்ககான காசோலையை வழங்கினாா். கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன், சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான ஏ.திருஞானசம்பந்தம், தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி பி.சிவஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நீதிபதிகள் சரண்யா செல்வம், ஆா்.செந்தில்குமாா், ஜெ.சரவணக்குமாா், வழக்குரைஞா் சங்கங்களின் தலைவா்கள் பாா்த்தசாரதி, காா்த்திகேயன், ஜான் ஆகியோா் உட்பட நீதிமன்ற பணியாளா்களும் கலந்து கொண்டனா். சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிா்வாகி கருணாகரன் நன்றி கூறினாா்.

Advertisement

மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 251 வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டதாகவும்,தீா்வுத் தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.