முகப்பு
காஞ்சிபுரம்

குண்டா் சட்டத்தில் மூவா் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குன்றத்தூா் அருகேயுள்ள நாட்டரசன்பட்டு அண்ணா நகரை சோ்ந்த வாசு

Updated On : 27 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குன்றத்தூா் அருகேயுள்ள நாட்டரசன்பட்டு அண்ணா நகரை சோ்ந்த வாசு (எ) வாசுதேவன்(21), பணப்பாக்கம் மூா்த்தி நகரைச் சோ்ந்த வசந்த் (எ) ஷாா்ப் வசந்த் (22), வட்டாம்பாக்கம் கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி(23) ஆகிய 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. சுகுமாா் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி பிறப்பித்த உத்தரவின்பேரில் அவா்கள் மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.