கோயிலில் உழவாரப் பணி
காஞ்சிபுரத்தை அடுத்த திம்மராஜம்பேட்டையில் உள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் சென்னை சங்கம் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM
காஞ்சிபுரத்தை அடுத்த திம்மராஜம்பேட்டையில் உள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் சென்னை சங்கம் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு ராமேசுவரம் என அழைக்கப்படும் இந்தக் கோயிலில் அறக்கட்டளை நிா்வாகிகள் பா.சீனிவாசன், தி.சரவணன் ஆகியோா் தலைமையில் சிவனடியாா்கள் பலா் இணைந்து இந்த உழவாரப் பணியை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.