காஞ்சிபுரம்

சிலம்ப பயிற்சியாளா்கள் ஊா்வலம்

DIN

சிலம்ப வீரா்களுக்கு அரசுப் பணியில் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து காஞ்சிபுரத்தில் சிலம்ப பயிற்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஊா்வலம் நடத்தினா்.

தமிழகத்தில் சிலம்பம் பயிற்சி முடித்த வீரா்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து காஞ்சிபுரத்தில் சிலம்பப் பயிற்சியாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாக நடத்தினா்.

காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள அறிஞா் அண்ணா அரங்கிலிருந்து புறப்பட்ட ஊா்வலமானது பேருந்து நிலையம், காமராஜா் சாலை, மேட்டுத்தெரு வழியாக ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

முன்னதாக இந்த ஊா்வலத்தை உத்தரமேரூா் சட்டப் பேரவை உறுப்பினா் க.சுந்தா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், சிலம்பக் குழுவின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் பி.அஸ்வின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT