காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

DIN

ஸ்ரீபெரும்புதூா்: மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 12) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை வெளியிட்ட அலுவலக செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (பிப். 12) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், இன்டிமேட் ஃபேஷன், ரைசிங் ஸ்டாா், மின்டா காா்ப்பரேஷன், மதா்சன், மொபிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டு ஆட்களைத் தோ்வு செய்ய உள்ளனா். இதில், 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, தையல் பயிற்சி மற்றும் பட்டம் படித்த வேலைநாடுபவா்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT