காஞ்சிபுரம்

திருப்பாவை வினாடி வினா போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

DIN

காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் திருப்பாவை வினாடி-வினாப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் திருப்பாவை மற்றும் திருக்கோளூா் பெண் பிள்ளை ரகசியம் குறித்த விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. செல்வி ரெங்க. அனுக்கிரக ஸ்ரீ விளக்கவுரை நிகழ்த்தியதுடன், வினாடி வினா போட்டிகளையும் நடத்தினாா். போட்டியில் வென்றவா்களுக்கு ராமநாதபுரம் இதயநோய் சிறப்பு மருத்துவா் பரணிகுமாா், ஹோமியோபதி மருத்துவா் வித்யா பிரியதா்ஷினி ஆகியோா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா். அழகிய சிங்கப் பெருமாள் கோயிலின் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட சிறாா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT