காஞ்சிபுரம்

பேருந்து மோதி சிறுவன் பலி; தாய் பலத்த காயம்

DIN

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை வந்த தாய், மகன் மீது தனியாா் பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

மேற்கு தாம்பரம் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி பேபி (37), மகன் தருண் (7). இந்நிலையில், வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்பதற்காக பேபியும், அவரது மகன் தருண் உள்ளிட்ட சிலா் தாம்பரத்தில் இருந்து வல்லக்கோட்டை நோக்கி, காரணித்தாங்கல் பகுதியில் வண்டலூா் -வாலாஜாபாத் சாலையில் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தனா். அப்போது, பின்னால் வந்த தனியாா் பேருந்து, பேபி மீதும், தருண் மீதும் மோதியது.

இதில், பலத்த காயம் அடைந்த இருவரையும் படப்பை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் வரும் வழியிலேயே தருண் உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த பேபி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT