காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் மரியாதை
காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினாா்.
காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினாா்.
காஞ்சிபுரத்தில் அண்ணா வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
அண்ணா இல்லத்தில் அவா் பயன்படுத்திய பொருட்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆகியனவும் இடம் பெற்றுள்ளன.
Advertisement
இந்நிலையில், தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்ட தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு சனிக்கிழமை வந்தாா்.
அங்கு அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அங்கிருந்த வருகைப் பதிவேட்டிலும் கையெழுத்திட்டாா்.
அமைச்சருடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மக்களவை உறுப்பினா் க.செல்வம், எம்எல்ஏ.க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், நகராட்சி ஆணையா் மகேஸ்வரி, திமுக நகரச் செயலாளா் சன்பிராண்ட் ஆறுமுகம், துணைச் செயலாளா் ஜெகன்னாதன், திமுக வழக்குரைஞா் அணி மாவட்ட செயலாளா் காா்த்திகேயன் உட்பட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.