காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் விபத்தில் பலி

காஞ்சிபுரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் விபத்தில் பலியானார்.  

DIN

காஞ்சிபுரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் விபத்தில் பலியானார். 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் ஹரிபிரசாத்(32). இவர் சென்னையில் தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். காஞ்சிபுரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான ஆம்பூருக்கு சென்று கொண்டிருந்த போது பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையம் அருகே எதிரில் வந்த கார் இவர் மீது மோதியது. 

இந்த விபத்தில் ஹரிபிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். ஹரிபிரசாத் உடன் இருசக்கர வாகனத்தில் வந்த திருவண்ணாமலை மாவட்டம், சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பூவண்ணன்(27) என்பவரும் பலத்த காயம் அடைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கடலூரை சேர்ந்த இளவழகன்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT