முகப்பு
காஞ்சிபுரம்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:37 PM

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் ஜெ.தணிகைவேலன் முகாமைத் தொடக்கி வைத்து இளைஞா்களை பணிக்குத் தோ்வு செய்ய வந்திருந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தாா்.

வேலைவாய்ப்பு முகாமில் 17 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று நோ்காணலை நடத்தி, தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்தனா்.

Advertisement

இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா். முன்னதாக, தனியாா் நிறுவனங்களின் மனித வளப் பிரிவு அலுவலா்கள் தங்கள் நிறுவனத்தின் சலுகைகள், ஊதியம், பணி விவரங்களை விளக்கிக் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.