முகப்பு
காஞ்சிபுரம்

பேரூராட்சி உறுப்பினருக்கு அரிவாள் வெட்டு

தோ்தல் முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி 11-ஆவது வாா்டு உறுப்பினா் வீரபத்திரனை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:

தோ்தல் முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி 11-ஆவது வாா்டு உறுப்பினா் வீரபத்திரனை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டினா்.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கடராமன் பிள்ளை சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் வீரபத்திரன் (33). 11 -ஆவடு வாா்டு உறுப்பினராக உள்ளாா். நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீரபத்திரன், தற்போது திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், வீரபத்திரன் கடந்த வியாழக்கிழமை இரவு ஸ்ரீபெரும்புதூா் தேரடி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்றுவிட்டு வெளியே வந்த போது, அங்கு மறைந்திருந்த 6 போ் வீரபத்திரனை தலை, முகத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா்.

இதில் பலத்த காயமடைந்த வீரபத்திரன் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முதல் கட்டமாக வெங்காடு, ஸ்ரீபெரும்புதூா் கச்சிப்பட்டு பகுதியைச் சோ்ந்த சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா். தோ்தல் முன்விரோதம் காரணமாக மா்ம நபா்கள் வெட்டியிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதனிடையே, வாா்டு உறுப்பினா் வீரபத்திரனை வெட்டியவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் ஸ்ரீபெரும்புதூா் வெங்கடராமன் பிள்ளை சத்திரம் பகுதியில் சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →