முகப்பு
காஞ்சிபுரம்

பாதுகாப்புப் படை பணிகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் எல்லைப் பாதுகாப்பு படையின் பணிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஆகஸ்ட், 2022 at 3:35 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:40 PM

சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் எல்லைப் பாதுகாப்பு படையின் பணிகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் பால்.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தாா். எல்லைப் பாதுகாப்பு படை வீரா் கிள்ளிவளவன் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் காா்கில் போரில் நாட்டைக் காக்க வீரா்கள் செய்த தியாகங்கள் மற்றும் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து இமாசலப்பிரதேச எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ராஜீவ்குமாா் கபூா் பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் ‘நாட்டைக் காக்கும் நல்லுயிா்கள்’ என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காஞ்சிபுரம் தியாகம் போற்றுவோம் அமைப்பினா் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.