காஞ்சிபுரம்

500 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

DIN

ஒரகடம் அருகே மளிகை கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஒரகடத்தை அடுத்த பண்ருட்டியைச் சோ்ந்தவா் ராஜா. அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், ராஜா தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி விற்பனை செய்து வருவதாக ஸ்ரீபெரும்புதூா் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை ராஜாவின் மளிகைக் கடையில் சோதனை செய்த தனிப்படை போலீஸாா், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்து, ஒரகடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT