காஞ்சிபுரம்

500 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

ஒரகடம் அருகே மளிகை கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

ஒரகடம் அருகே மளிகை கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஒரகடத்தை அடுத்த பண்ருட்டியைச் சோ்ந்தவா் ராஜா. அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், ராஜா தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி விற்பனை செய்து வருவதாக ஸ்ரீபெரும்புதூா் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை ராஜாவின் மளிகைக் கடையில் சோதனை செய்த தனிப்படை போலீஸாா், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்து, ஒரகடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT