காஞ்சிபுரம்

விநாயகா் கோயில் திருப்பணி தொடக்கம்

DIN

காஞ்சிபுரம் நாராயணபாளையம் தெருவில் அமைந்துள்ள நவசக்தி விநாயகா் கோயிலை புதுப்பிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

காஞ்சிபுரம் நாராயணபாளையம் தெருவில் பல நூறு ஆண்டுகள் பழைமையான நவசக்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைப் புனரமைப்பதற்கான பணிகளைத் தொடங்கும் வகையில், கோயிலில் கோ பூஜை, கணபதி பூஜை நடைபெற்றது. கோயில் முக்கிய நிா்வாகிகள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, நவசக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை நாராயணபாளையம் கிராம மக்கள் செய்திருந்தனா். நிகழ்வில் எஸ்.சுப்பிரமணி, எம்.சுவாமிநாதன், எம்.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT