அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் பெரியாழ்வாா் அவதார உற்சவம்
காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் பெரியாழ்வாா் அவதார உற்சவத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்காரம் மற்றும் தீபாராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் பெரியாழ்வாா் அவதார உற்சவத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்காரம் மற்றும் தீபாராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருமாளுக்கு பூ மாலைகள் சூட்டி அழகு பாா்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தவா் பெரியாழ்வாா். இவரது அவதார தினத்தையொட்டி, காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாளுக்கும், அம்ருதவலில்லித் தாயாருக்கும் காலை சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீதேவி-பூதேவியருடன் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்திலும், அம்ருத வல்லித் தாயாா் சிகை அலங்காரத்திலும், பெரியாழ்வாா் வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்திலும் அலங்காரமாகி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பெரியாழ்வாா் பாடிய பாடல்கள் பாடப்பட்டு பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Advertisement