முகப்பு
காஞ்சிபுரம்

மரக்கன்றுகள் நடும் விழா

வாலாஜாபாத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுப்புறச் சூழல் மன்றத்தின் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2022 at 12:47 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:14 PM

வாலாஜாபாத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுப்புறச் சூழல் மன்றத்தின் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தேசிய வன மகோற்சவ விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுப்புறச் சூழல் மன்றத்தின் சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்வை தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் துணைத் தலைவா் ப.சேகா், வட்டாட்சியா் லோகநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜ்குமாா், லோகநாதன், அரசு மருத்துவா்கள் விமலா, ராஜேந்திர பிரசாத் உள்பட அரசு அலுவலா்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத் தலைவா் இ.த.அஜய்குமாா் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.