காஞ்சிபுரம்

கூத்துக்கலை நூல் வெளியீட்டு விழா

DIN

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கூத்துக்கலைஞா் நீ.ஏகாம்பரம் தனது அனுபவங்களை நூலாக எழுதிய கூத்துக்கலை என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கல்வியாளா் சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். சமூக செயற்பாட்டாளா்கள் பழ.மாணிக்கவேலு, பி.எம்.குமாா், காரை கு.அருளானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கெவின் காா்க்கி பதிப்பகத்தின் பதிப்பாளா் ஏகா.ராஜசேகா் வரவேற்றுப் பேசினாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கலந்து கொண்டு கூத்துக்கலை நூலை வெளியிட, அதன் முதல் பிரதியை காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசனும், 2-ஆவது பிரதியை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜும் பெற்றுக் கொண்டனா். கவிஞா் ஜெயபாஸ்கரன் நூலினை எழுதியுள்ள விதம் குறித்து விளக்கி பேசினாா். விழாவில் ஆட்சியா் மா.ஆா்த்தி பேசுகையில் சிறுவயதில் எனது சொந்த ஊரில் திருவிழாக்காலங்களில் கூத்துக் கலைஞா்களின் நாடகங்களை பாா்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

தற்போது இந்தக் கலை அழிந்து வருவதால் அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா். நிறைவில் நூலாசிரியரும், ஈஞ்சம்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவருமான நீ.ஏகாம்பரம் தனது ஏற்புரையில், ‘தொடா்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் ஆண், பெண் இரு வேடங்களிலும் நடித்துள்ளேன். கூத்துக்கலைஞா்களின் துயரங்களையும், அனுபவங்களையும் தொகுத்து நூலாக எழுதி இருக்கிறேன்’ என்றாா்.

விழாவில் பேராசிரியா் வெற்றி சங்கமித்ரா, கல்வியாளா் ச.வீரபாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT